சிசிடிவி காட்சி மூலம் துப்பு துலக்கிய போலீஸார்: அரிவாளால் தாக்கி வழிப்பறி செய்தவர் கைது


சென்னை: சென்னை பெரம்பூர், காமராஜர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (58).இவர் கடந்த 25-ம் தேதி அதிகாலை செம்பியம், நாகாத்தம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிவகுமாரை அரிவாளால் தாக்கி, அவர் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர், வீடு திரும்பிய அவர், இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாகஅப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளைகைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிவகுமாரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த கோபிநாத் (40) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

x