சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கோப்புப் படம்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை, சைபர் குற்றம், பாலியல் தொழில், உணவு பொருட்கள் கடத்தல், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் 23 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

வழிப்பறியில் ஈடுபட்டதாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த முருகன் (24), நீலாங்கரையை சேர்ந்த ரஞ்சித் (24), அண்ணாநகரை சேர்ந்த ராபர்ட் (22), ஆதம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன் (30), திரிசூலத்தை சேர்ந்த அருண்(23), நங்கநல்லூரை சேர்ந்த பரத்குமார் (23), கஞ்சா விற்பனை செய்ததாக மயிலாப்பூரை சேர்ந்த ஆர்.கார்த்திக் (23), கே.கார்த்திக் (22) உள்பட 23 பேரை போலீஸார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இதுவரை 885 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

x