ரூ.50 கோடி மதிப்பு நில மோசடி வழக்கு: திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது


திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி கணவர் பொன்னுசாமி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பொன்.சரஸ்வதி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவரது கணவர் என்.பொன்னுசாமி(68) ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் (72) என்பவருக்குச் சொந்தமான 5.62 ஏக்கர்நிலத்தை 2006-ல் போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி.இது தொடர்பாக பொன்னுசாமி மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் எட்டிக்கண் புகார் செய்தார்.

புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், தலைமறைவான பொன்னுசாமியைத் தேடிவந்தனர். இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த பொன்னுசாமியை நேற்று கைது செய்த போலீஸார், நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்

x