30 ரூபாய்க்காக நண்பர் கொலை - இளைஞரை கைது செய்தது போலீஸ்


மும்பை: ஆட்டோ கட்டணமாக 30 ரூபாய் செலுத்துவது தொடர்பான தகராறில், நண்பரை கொலை செய்த 29 வயது இளைஞரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சைஃப் சாஹித் அலி மற்றும் சக்கன் அலி ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சமீபத்தில் மும்பைக்கு வந்து, அங்குள்ள ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், மும்பையின் குர்லா பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணம் செலுத்துவது தொடர்பாக 30 ரூபாய் கேட்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் வன்முறையாக மாறியதில் தனது நண்பரான சக்கன் அலியை, சைஃப் சாஹித் அலி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த மும்பை குற்றப்பிரிவு போலீஸார், சாஹித் அலியை கல்யாண் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.

x