முதலிரவு அறையில் மனைவியைக் கொன்ற கணவன்: அடுத்து நடந்த அதிர்ச்சி


முதலிரவு அறையில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன் தற்கொலை செய்த சம்பவம் கோலாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கேஜிஎஃப் தாலுகாவில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தில் லிகிதா ஸ்ரீ(19), நவீன் குமார்(27) ஆகியோருக்கு திருமணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறையில் லிகிதாவுக்கும், நவீனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென லிகிதாவை அவரது கணவர் நவீன்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதன் பின் அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சிகிச்சைக்காக ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட நவீன், சிகிச்சை பலன்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டர்சன் டவுன் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். கணவன், மனைவி இருவருக்குள்ளும் எதனால் சண்டை ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை செய்த சம்பவம் கோலாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x