மதுரை: ரவுடியின் கூட்டாளிகளை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் வந்த மற்றொரு ரவுடி கைது


மதுரை: மதுரையில் பிரபல ரவுடியின் கூட்டாளிகளை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் வந்த மற்றொரு ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை கீரைத்துறை காவல் நிலைய எஸ்ஐ-யான மணிவண்ணன் தலைமையிலான போலீஸார் இன்று (ஆக.6) கீரைத்துறை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது காமராஜர்புரம் தேவர் சிலை அருகே ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தார். போலீஸார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ராமநாதபுரம் மாவட்டம், காரையூரைச் சேர்ந்த ரவுடி அலெக்ஸ் (எ) சின்ன அலெக்ஸ் (32) என்பது தெரிய வந்தது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் உறவினரான அலெக்ஸ், தங்களது எதிரியான ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளக்காளியின் கூட்டாளிகளை தாக்குவதற்காக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அலெக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x