இளைஞர் அடித்துக் கொலை: பெண் உள்பட மூன்று பேர் கைது


புல் அறுப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராமநகர மாவட்டம், சன்னபட்னா கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(25). இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். ரஞ்சித் குமாருக்கும், அவரது உறவினர்களான நாகராஜு, மங்களம்மா மற்றும் அவரது மகன் சுனில் குமார் ஆகியோருக்கும் பண்ணையில் புல் வெட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பண்ணையில் ரஞ்சித் குமார் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமா நாகராஜு, மங்களம்மா மற்றும் அவரது மகன் சுனில் குமார் ஆகியோர் ரஞ்சித்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து சன்னபட்னா காவல் நிலையத்தில் நாகராஜு, மங்களம்மா மற்றும் அவரது மகன் சுனில் குமார் சரணடைந்தனர். இக்கொலை வழக்குத் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து ரஞ்சித்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புல் அறுக்கும் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x