கல்லூரியின் 8வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை


பெங்களூரு: நர்சிங் கல்லூரி மாணவி ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல்யா(19). இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரு உத்தர் தாலுகா சிக்கபனாவரத்தில் உள்ள வித்யோதயா நர்சிங் கல்லூரியில் சேர்ந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செல்போனில் அவரது தாயை இன்று அழைத்துள்ளார். அப்போது தான் தனிமையாக இருப்பதாக கூறிக்கொண்டே கல்லூரி கட்டிடத்தில் ஏறியுள்ளார். 8வது மாடியில் ஏறிய அதுல்யா, செல்போனில் பேசியவாறு திடீரென கீழே குதித்தார். இதைப் பார்த்த மற்ற மாணவர்களும், பேராசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த அதுல்யா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அதுல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோலதேவஹள்ளி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x