அரியலூர் அருகே நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு!


அரியலூர் அருகே விபத்துக்குள்ளான கார்கள்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கரூரை சேர்ந்தவர் கலைவாணன் (49). இவர், தனது மனைவி மகேஸ்வரி (45), மகள் ஆர்த்தி (18) ஆகியோருடன் தனது காரில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள உறவினர் இல்லத்துக்கு சென்று விட்டு, இன்று இன்று (ஆக.5) ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி - சிதம்பரம் சாலையில், நெரிஞ்சிக்கோரை அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்த போது, எதிர்திசையில் சீர்காழியை சேர்ந்த ரமேஷ் (46) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கலைவாணன் காருடன் நேருக்கு நேர் மோதியது.

இதில், படுகாயமடைந்த கலைவாணன், மகேஸ்வரி தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்கும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x