மதுரையில் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: மதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் பலி


மதுரை மேலூர் அருகே சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில் மதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி உள்ளது. இதில் சரக்கு லாரி இன்று ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார், அந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த மூன்று பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து காரில் இருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் என்பது தெரிய வந்தது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதுரை வரும் போது இந்த விபத்து நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x