திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி


திண்டுக்கல்: நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் எலெக்ட்ரிசியன் ஜோசப் (வயது 25). இவரது மனைவி அருணா (வயது 23), அவர்களது மகன் ரக்சன் ஜோ (வயது 7), மகள் ரக்ஷிதா (வயது 4) தாய் சரோஜாதேவி(60) ஆகிய 5 பேரும் இருசக்கர வாகனத்தில் இன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நல்லாம்பட்டி சாலையில் இவர்கள் வந்துகொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜோசப் ஓட்டிவந்த பைக்கின் மீது மோதியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சரோஜா தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் மற்றொரு பைக்கில் வந்தவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், இறந்த நான்கு பேரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

x