சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னையில் இருந்து மும்பை,கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களில் சோடியம் கரைசல் எனப்படும் திரவ வடிவிலானகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று பகல் 12 மணி அளவில் இ-மெயில் மூலம் மிரட்டல்வந்தது.

இதையடுத்து, சென்னைவிமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் பயணிகள் அனைவரையும், வழக்கமான சோதனைகளோடு மேலும் 2 முறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இறுதியில், இது வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 10-வது முறையாகசென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x