புதுப்பாக்கம் | பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தவர் கைது


புதுப்பாக்கம்: கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (24). தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கும் கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், சட்டஞ்சால் பகுதியைச் சேர்ந்த தன்சீம் (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கணவன், மனைவி போல் லிவிங் டூ கெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தன்சீமின் வற்புறுத்தலின் பேரில் தான் இதுவரை 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், 4-வது முறை கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் கடந்து தன்சீமிடம் தெரிவித்தபோது, கோபமடைந்த தன்சீம் தனது வீட்டில் இருந்த ஐபோன், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் ரம்யா கடந்த2021-ல் கேளம்பாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து துபாய்க்கு தப்பி சென்று, அங்கிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த தன்சீம் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸார் மும்பை சென்று தன்சீமை அழைத்து வந்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

x