சென்னையில் பரபரப்பு: கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை!


சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக இந்த பாலம் காட்சி தரும். இந்த பாலத்தில் இன்று டூவீலரில் ஒரு வாலிபர் வந்தார். திடீரென டூவீலரை நிறுத்தி விட்டு பாலத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே குதித்தார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்தனர். 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்த அந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தது தெரிய வந்தது. தற்கொலை செய்த வாலிபர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்பது தெரிய வந்தது. அத்துடன கிரிக்கெட் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.. எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x