அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட விடாமல் மிரட்டுகிறார் - முன்னாள் எம்எல்ஏ மீது ஆட்சியரிடம் புகார்


கோவை: மாங்கரை அருகே வீரபாண்டி பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட விடாமல் வால்பாறை முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் மிரட்டுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

மாங்கரை புளியந்தோப்பு அருகே வீரபாண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழுவாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும் போது, ”அரசு சார்பில் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் வீடு கட்ட முயற்சி மேற்கொண்டால், வால்பாறை முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வருகிறார். அரசு அதிகாரிகளிடம் எங்களுக்கு வீடு கட்ட அனுமதி அளித்தால் தான் தீக்குளித்து விடுவதாக கூறி வருகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றனர்.

x