பைக்கில் சென்ற ஜோடி: இளைஞர் வெட்டிக்கொலை... பெண் கவலைக்கிடம்


தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெல்காம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டம், முதலாகி தாலுகாவில் உள்ள லக்ஷ்மேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் மோமின் (28). அவர் இன்று அதிகாலை பைக்கில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்து ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் அவர்கள் இருவரும் தப்பியோடினர். ஆனால், அவர்களை விடாமல் துரத்தி, துரத்தி அரிவாளால் அவர் வெட்டினார்.

இதில் மோமின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயத்துடன் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை குறித்து விசாரணை நடத்தியதில் மோமினை கொலை செய்தவர் அமோகத்வாலேஷ்வர் என்பது தெரிய வந்தது. அவரது மனைவி ஷில்பாவிற்கும், கொலை செய்யப்பட்ட மோமினுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் பைக்கில் சென்ற போது வழிமறித்து அமோகத்வாலேஷ்வர் வெட்டியது தெரிய வந்தது. படுகாயமடைந்த ஷில்பாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குல்கொடா போலீஸார் வழக்குப்பதிவு செய்து அமோகத்வாலேஷ்வரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x