சேலம் | கைதிகளுக்கு கஞ்சா விநியோகித்த சமையலர் டிஸ்மிஸ்


சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்த சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் தனபால் (40). சேலம் மத்திய சிறையில் சமையலராக பணியாற்றிய தனபால், சிறைக்குள்கஞ்சா கடத்திச் சென்றபோது பிடிபட்டார்.

அவரிடமிருந்து 140 கிராம்கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து சமையலர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள சிறைத் துறை ஐ.ஜி. மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். இதன்படி, கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராஜர் விசாரணை மேற்கொண்டதில், சமையலர் தனபால் சிறைக்குள் கஞ்சா கடத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சமையலர் தனபாலை பணிநீக்கம் செய்து, சேலம் மத்தியசிறைக் கண்காணிப்பாளர் (பொ) வினோத் நேற்று உத்தரவிட்டார்.

x