காரின் முன்பக்க டயர் வெடித்த விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உறவினர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓட்டப்பட்டி புதுகுடியிருப்பதை சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற வட்டாச்சியர். இவர், தனது குடும்பத்தினர் 5 பேருடன் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் இன்று சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் தந்தை மோகன், மகன் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய 2 பேரின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.