கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!


எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா

பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநில பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (30). இவர் மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த இவர், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சவுந்தரியா தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சவுந்தரியா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அம்மாநில பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

x