பழநி கோயிலில் மொட்டையடித்து சுந்தர்.சி நேர்த்திக்கடன்: குஷ்புவுடன் வந்து வழிபாடு!


திண்டுக்கல்: தங்களின் 25-வது திருமண நாளையொட்டி பழநியில் மொட்டை அடித்து, மனைவி குஷ்பு மற்றும் குடும்பத்துடன் இயக்குநர் சுந்தர்.சி தரிசனம் செய்தார்.

தனது 25-வது திருமணநாளையொட்டி, பழநி முருகன் கோயிலில் மொட்டை அடித்து இயக்குநர் சுந்தர்.சி, குடும்பத்துடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

சுந்தர்.சி, நடிகை குஷ்பூ தம்பதியினர் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை குடும்பத்துடன் வந்தனர். முன்னதாக, பழநி அடிவாரத்தில் சுந்தர்.சி, மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். பின்னர், தனது குடும்பத்துடன் அடிவாரத்தில் இருந்து வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு சந்நியாசி அலங்காரத்தில் தண்டாயுதபாணியை மனமுருகி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்களுடன் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

x