நடிகை பார்வதி நாயர் திருமணம்!


தமிழில், ‘என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’ உட்பட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள இவர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இவர்களின் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

x