தொப்புள் கொடி கத்தரித்த விவகாரம்: உதவியாளர் மூலம் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!


தன் குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரித்த விவகாரம் குறித்து யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தை பிறந்த போது மருத்துவர்கள் முன்னிலையில் தொப்புள் கொடியை கத்தரித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. மருத்துவ விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மருத்துவத்துறையினரிடம் இர்ஃபான் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் வெளிநாட்டில் இருப்பதால் தனது உதவியாளர் மூலம் மன்னிப்பு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். எந்த உள்நோக்கத்துடனும் அந்த வீடியோவை பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களைத் தான் எப்போதும் மதிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் இர்ஃபான் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

x