பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்தபோதே அதிரடியாக 24 மணிநேரத்திற்குள்ளாகவே சாச்சனா வெளியேற்றப்பட்டார். சீக்ரெட் ரூமுக்குள் இருந்த இவர் பின்னர் மீண்டும் ஆட்டத்தில் தொடர்கிறார். இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் ரவீந்தரும் இரண்டாவது வாரத்தில் அர்னவும் வெளியேறினார்கள். இந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், பவித்ரா, அனிஷிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மூன்று ஆண் போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரம் நாமினேஷனில் உள்ளனர்.

இது மட்டுமல்லாது இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறியதால் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டிருக்கிறார். தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்று கிடைத்த கேப்பில் எல்லாம் அழுது கொண்டே இருந்தார் தர்ஷா. அவரது விளையாட்டுத் திறமையும் இதில் பெரிதாக வெளியாகவில்லை என்பதே அவர் வெளியேற முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

x