தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!


சென்னை: தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

நடிகர், தவெக கட்சி தலைவர் விஜயின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடக்க இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில், விஜயின் பெற்றோர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

பின்பு எஸ்.ஏ.சி. செய்தியாளர்களை சந்திக்கையில், “வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மாநாடு மிகச்சிறப்பாக நடந்து விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். விஜய் பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடசென்னையை சேர்ந்த மாறன், ரஞ்சித் இவர்களெல்லாம் சேர்ந்து கொரட்டூர் பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர். விஜய்க்காக அன்னதானம் செய்துள்ளனர்” என்றார்.

x