பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் ரஞ்சித் கலந்துகொள்ள காரணம் இதுதான் - ப்ரியா ராமன் பேட்டி!


சென்னை: நடிகர் ரஞ்தித் பிக்பாஸ்8 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்ன காரணம் என்பது பற்றி அவரது மனைவி, நடிகை ப்ரியா ராமன் இந்து தமிழ் திசையுடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஏழு சீசன்களை முடித்து எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நடிகர் ரஞ்சித்தும் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். முதல் வாரத்தில் அவரது விளையாட்டு சோர்வாக இருந்தாலும் கடந்த வாரத்தில் சிறப்பாக விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார். அவரது பிக்பாஸ் விளையாட்டு பற்றி அவரது மனைவி, நடிகை ப்ரியா ராமன் இந்து தமிழ் திசையுடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் நாங்கள். தமிழ் பிக்பாஸ் ஒவ்வொரு சீசனையும் விடாமல் பார்ப்போம். கடந்த சில சீசன்களில் இருந்தே ரஞ்சித் பெயரும் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது. இந்த சீசனில்தான் எல்லாம் கூடி வந்திருக்கிறது. நடிகர், இயக்குநர் என அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பரிச்சயமானவராக இருந்தாலும், இந்த தலைமுறை ரசிகர்களிடமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பேசும் ‘தங்கம், செல்லம், கண்ணு’ வார்த்தைகளை எல்லாம் போலி என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் இதுபோன்ற வட்டார வழக்குகளை அருகில் இருந்து பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால், இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே சிலர் தங்கம், செல்லம் என பேசுவது ரஞ்சித்தின் பாச பாதிப்பால்தான். அவரது உண்மை முகத்தை மெல்ல மெல்ல பார்வையாளர்களும் உள்ளே போட்டியாளர்களும் புரிந்து கொள்வார்கள். பிக்பாஸ்8 டைட்டில் வெல்ல என்னைப் பொருத்தவரை அனைத்துப் போட்டியாளர்களுமே தகுதியானவர்கள்தான்” என்றார்.

x