இசையமைப்பாளர் தேவா மகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!


இசையமைப்பாளர் தேவா மகள் மீது அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. இவரது மகள் ஜெயப்பிரதாவுக்கு சென்னை, வடபழனியில் சொந்த வீடு இருக்கிறது. இதனை தீபிகா மற்றும் ஜெயக்குமார் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில், தான் குடியிருக்கும் வீட்டிற்குள் புகுந்த ஏழு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை அடித்து உடைத்ததாகவும் உயிர் பிழைத்ததே பெரிது என்றும் தனக்கும் தனது கணவன் உயிருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜெயப்பிரதாதான் காரணம் என்றும் கதறியபடி வீடியோ வெளியிட்டு புகார் கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தும் தீபிகா எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. இருந்தும் வடபழனி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மாதம் ரூ. 25 ஆயிரம் வாடகையை தீபிகா ஓராண்டு காலமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதுதொடர்பாக, ஜெயப்பிரதா காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருக்கிறார். அப்போது வாடகையை செலுத்துவேன் என சொல்லியிருந்தும் தீபிகா முறையாக வாடகையை கொடுக்காமல் இருந்திருக்கிறார். தான் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்குவதாகவும் சொல்லி இருக்கிறார். அவர் எந்தப் புகாரும் கொடுக்காததால் காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

x