ஜீ தமிழின் சரிகமப சீசன் 4 டைட்டிலை வென்றார் மகிழன்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி சரிகமப. இதன் 4-வது சீசன், 23 போட்டியாளர்களுடன் தொடங்கியது. நடுவர்களாகப் பாடகர்கள் நிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக ஒளிபரப்பானது. இறுதிச்சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வானார்கள். டைட்டில் வின்னராக மகிழன் தேர்வானார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா, 2-வது ரன்னராக விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வு என்ற அடிப்படையில் மரக்காணம் சரண் 4-வது இடம் பிடித்தார்.

அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

x