திருமண கொண்டாட்டத்தில் சோபிதா துலிபாலா


நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதை அடுத்து தாங்கள் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.

சோபிதா, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்திருந்தார். நாக சைதன்யாவுடன் இவர் வெளிநாடுகளில் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பானது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்களை நடிகர் நாகர்ஜுனா வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தேதி அறிவிக்கப்படவில்லை.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் இப்போது தொடங்கியுள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சோபிதா, திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

x