'கயல்’ சீரியல் முடியப்போகிறதா? உண்மையை உடைத்த நடிகை சைத்ரா ரெட்டி!


’கயல்’ சீரியல் முடியப்போகிறதா என்ற கேள்விக்கு நடிகை சைத்ரா ரெட்டி பதில் கொடுத்திருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கயல்’. டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக ’கயல்- எழில்’ திருமணம் தொடர்பான எபிசோடுகளே ஒளிபரப்பாகி வருகிறது.

இவர்களது திருமணம் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக அத்தனை தடைகளையும் கடந்து இவர்களது திருமணம் முடிந்த நிலையில் சீரியல் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனை தெளிவுப்படுத்தி இருக்கிறார் சைத்ரா ரெட்டி. தனது சமூகவலை தளப்பக்கத்தில், ’’கயல்’ சீரியலில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்த கயல்- எழில் திருமண எபிசோட் சந்தோஷமாக முடிந்து விட்டது! உங்கள் எல்லோருடைய அன்பிற்கும் நன்றி. நான் எங்கே போனாலும் என்னைப் பின் தொடரும் கேள்வி ‘கயல்’ இதோடு முடியப் போகிறதா என்பது தான். நிச்சயம் இல்லை. பல எதிர்பாராத திருப்பங்கள் இந்த சீரியலில் அடுத்தடுத்து காத்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்.

x