பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன்: நடிகர் சுதீப் கிஷன் அறிவிப்பு!


பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக நடிகர் சுதீப் கிஷன் அறிவித்திருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் கன்னடத்தில் 11 சீசன்கள் நெருங்கி இருக்கிறது. கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அதை சுதீப் கிஷன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இதுபற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த 11 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்து வந்த அன்பும் ஆதரவும் அளவிட முடியாதது. இப்போது நான் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர விரும்புகிறேன். இந்த சீசனே நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் தொலைக்காட்சியும் பிக்பாஸ் ரசிகர்களும் என் முடிவை ஆதரப்பீர்கள் என நம்புகிறேன். இந்த சீசனை இன்னும் சிறப்பானதாக மாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் அன்பு’ எனக் கூறியிருக்கிறார். மேலும், கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 9.9 ரேட்டிங் பெற்றுள்ளது என்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

x