சமந்தாவுடன் நடிக்க வேண்டும்: ஆசையை வெளிப்படுத்திய நடிகை அலியா பட்!


சென்னை: நடிகை சமந்தாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அலியா பட் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை அலியா பட் நடிப்பில் ’ஜிக்ரா’ என்ற படம் இந்த வாரம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டார். தனது படத்தை புரோமோட் செய்வதற்காக உடனே ஒத்துக் கொண்டு நிகழ்வுக்கு வந்த சமந்தாவுக்கு அலியா நன்றி தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் சமந்தாவின் ‘ஊ அண்டாவா...’ பாடலையும் அலியாபட் பாடி கலகலப்பாக்கினார். சமந்தா குறித்து அவர் பேசியதாவது, “திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் சமந்தா ஹீரோதான். ஒரு படத்திற்காக நீங்கள் கொடுக்கும் உழைப்பைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்திலும் சினிமாவிலும் நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். த்ரிவிக்ரம் சார் எங்களுக்காக ஒரு கதையை உருவாக்குங்க. மேடைக்காக இதை நான் சொல்லவில்லை. நடிகைகளுக்குள்ளே பொறாமை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், நான் கேட்டதும் உடனே வர ஒத்துக் கொண்ட சமந்தாவுக்கு நன்றி” என்றார்.

x