‘வேட்டையன்’ படத்தில் இருந்து எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்: நடிகை ரித்திகா சிங்!


சென்னை: ‘வேட்டையன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் பற்றி நடிகை ரித்திகா சிங் இந்து தமிழ் திசையுடனான யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், துஷாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, “நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னபோது நான் நம்பவே இல்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரட்டும் என்றுதான் காத்திருந்தேன். ஏனெனில் இதற்கு முன்பு பல பெரிய படங்களில் இதுபோன்று நடிக்க ஒப்பந்தமாகி பின்பு வெளியேறிய விஷயமும் நடந்திருக்கிறது. அதனால், படக்குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் நான் அழுதே விட்டேன்.

என்னுடைய உறவினர்களும் என்னுடைய இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர். சில சமயங்களில் நான் குறைவான படங்களில்தான் நடிக்கிறேன் என நினைத்து சந்தேகப்பட்டிருக்கிறேன். ஆனால், அது சரியான விஷயம்தான் என ரஜினிகாந்த் சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். அதுபோல, என் குரல் தனித்துவமாக இருக்கிறது என்று சொல்லி ‘வேட்டையன்’ படத்தில் டப்பிங் கொடுக்கவும் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த விஷயங்களை எல்லாம் மறக்க மாட்டேன்” எனப் பேசியிருக்கிறார்.

x