நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன் - சரிந்து விழுந்த மேடையால் பரபரப்பு!


தெலங்கானா: வணிக வளாக திறப்பு விழா ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டபோது எதிர்பாராத விதமாக மேடை சரிந்து விழுந்தது.

நடிகை பிரியங்கா மோகன் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் இந்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ள பிரியங்கா மோகன், இன்று தெலங்கானா தோரூரில் வணிக வளாகம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மேடை சரிந்து விழுந்ததில், மேடையில் இருந்த பிரியங்கா மோகன் உட்பட அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மேடையில் அதிக அளவிலான நபர்கள் நின்றதே இந்த விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் தனக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மற்றபடி தான் நலமுடன் இருப்பதாகவும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x