நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் தற்போது எப்படி உள்ளது என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

செரிமானப் பிரச்சினைக் காரணமாக நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவருக்கு மூன்று வித பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்பி ட்விட்டரில் வாழ்த்தி செய்தி பகிர்ந்திருக்கும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் எதுவும் அவருக்கு செய்யப்படவில்லை என்றும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. திட்டமிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

x