உண்மையை மறைத்து என்னை மோசமாக சித்தரிக்க முயற்சி: ஜெயம் ரவிக்கு ஆர்த்தி ரவி பதில்!


ஜெயம் ரவி தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்த்தி ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி- ஆர்த்தி ரவி விவாகரத்துதான் பேசுபொருளாகி இருக்கிறது. பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு என எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் சந்தேகப்படுவது, சண்டையிடுவது, செலவுகள் கூட அவரிடம்தான் கேட்டு செய்ய வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மீது வைத்தார்.

இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக ஆர்த்தி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தான் அமைதியாக இருப்பதால் ஜெயம் ரவி சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடாது என்று சொல்லியிருக்கிறார். அவர், ‘என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் கருத்துகள் மீதான என்னுடைய மவுனத்தின் வெளிப்பாடு, பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கண்ணியத்தை கடைபிடிக்கும் வகையிலும், உண்மையை மறைக்க என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும், மவுனம் காக்கிறேன். அதே நேரம் நீதித் துறையால் எனக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை வெளிப்படுத்தினேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணம் எனும் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விதமாக பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். என் குடும்பத்தின் நலன் குறித்தே என் முழு கவனமும் உள்ளது. கடவுள் நல்வழிகாட்டுவார் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

x