தவெக கட்சியில் பதவி கேட்ட பெண்: புஸ்ஸி ஆனந்திடம் நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு!


தவெக கட்சியில் பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறார். மாவட்டந்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று கும்பகோணத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெண் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

புஸ்ஸி ஆனந்த் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட புஷ்பா என்ற பெண்மணி, “என் தம்பி நீண்ட நாட்களாக ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக இருக்கிறான். அவனுக்கு தவெகவில் ஏன் பதவி கொடுக்கவில்லை? தமிழக வெற்றிக் கழகத்தின் போர்டே எங்கள் நிலத்தில் தான் உள்ளது. ஆனால், இதுவரை என் தம்பிக்கு பதவி தரவில்லை.

உங்களால்தான் எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது” என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அங்கிருந்த நிர்வாகிகள் புஷ்பாவை சமாதானம் செய்ய முயன்றி செய்தனர். புஷ்பாவால் கடுப்பான புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இந்த காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

x