விஜய்க்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்திடாதீங்க: புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்!


தவெக கட்சியின் முதல் அடுத்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில் நேற்று பனையூரில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தினை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை ஏற்று நடத்தினார். மாநாடு தொடர்பாக கட்சியின் சார்பில் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதை மட்டுமே கட்சியினர் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மாநாட்டிற்கு வருவோர் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஒழுக்கத்தோடு வரவேண்டும். தலைவர் விஜய்க்கும் கட்சிக்கும் எந்தவிதமான களங்கமும் ஏற்படுத்தி விடக்கூடாது. மாநாட்டிற்கு வரும் தாய்மார்கள், பெண்களை பத்திரமாக அழைத்து வந்து, பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகளுக்கு தனித்தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

x