நடிகர் சசிகுமார் - சிம்ரன் இணையும் புதிய படம் அறிவிப்பு!


நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’கருடன்’, ‘நந்தன்’ படங்களுக்குப் பிறகு நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் விஜயின் 69வது படத்தில் நடிக்க சிம்ரன் வாய்ப்பு கேட்டிருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து யாரிடமும் தான் வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை என்று தெளிவுப்படுத்தினார் நடிகை சிம்ரன். இப்போது சசிகுமாருடன் அவர் தனது அடுத்தப் படத்தை அறிவித்து இருக்கிறார்.

x