திருப்பதி லட்டு விவகாரம்: ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷன்!


திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷனுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் iது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘வேட்டையன்’ படம் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதை எல்லாம் படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் அதிகமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் சந்தோஷமாக உள்ளது. ’தர்பார்’ படத்திற்குப் பின்பு ‘வேட்டையன்’ படத்தில் தான் முழு நீள போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்” என்றார்.

அதன் பின்னர் ரஜினியிடம் செய்தியாளர்கள் “நீங்கள் ஒரு ஆன்மிகவாதி. திருப்பதி லட்டு விவகாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய போது, “மன்னித்து விடுங்கள்! நோ கமெண்ட்ஸ்” என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

x