“தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறேனா?” - நடிகர் அசோக் செல்வன் விளக்கம்


நடிகர் தனுஷ் இப்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார் என்றும் ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் உட்பட பலர் இதில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் அசோக் செல்வனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதை அசோக் செல்வன் மறுத்துள்ளார்.

“தனுஷின் தீவிர ரசிகன் நான். அவருடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், அவர் இயக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்

x