‘ஆகக்கடவன’ படத்தின் கதை என்ன?


‘அட்டக்கத்தி’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ படங்களிலும் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில குறும்படங்களிலும் நடித்தவர் ஆதிரன் சுரேஷ். இவர், கதை நாயகனாக நடித்துள்ள படம், ‘ஆகக்கடவன’. வின்சென்ட், சி.ஆர்.ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ, லியோ வெ. ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு லியோ வெ.ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார்.

தர்மா இயக்கியுள்ளார். சென்னை திரைப்படக் கல்லூரி முன்னாள்மாணவரான அவர் கூறும்போது, “ஒருவர் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் அவர் வாழ்வின் நன்மை, தீமையைத் தீர்மானிக்கும். ஒருவர் நல்லதைப் பேசினால் நல்லதே நடக்கும். இதுவே எதிர்வினைக்கும் பொருந்தும் என்பதே பிரபஞ்ச விதி. இதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்

x