பிரபல யூடியூபர் மீது நடிகை பாலியல் புகார்: ஆபாச வீடியோ எடுத்து ரூ.2 கோடி பணம் பறித்ததாக வழக்கு!


தன்னை பலாத்காரம் செய்து, ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டு ரூ.2 கோடி வரையில் பணம் பறித்ததாகவும் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய். உடற்பயிற்சி வீடியோக்களை அதிகம் பதிவிட்டு சமுக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஏழைகளை 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைப்பது, ஆயிரம் பேருக்கு இலவசமாக பெட்ரோல் போடுவது போன்ற பல விஷயங்களை செய்து பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார். இவர்மீது 25 வயதாகும் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்த அந்த நடிகை, இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றில் ஹர்ஷா சாயைச் சந்தித்ததாகவும் இந்த நட்பு அதிகரித்திருந்த நிலையில், இருவரும் காதலிக்க துவங்கியதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஹர்ஷா சாய் பலாத்காரம் செய்ததாகவும் நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்களையும், வீடியோவும் பதிவு செய்து கொண்டு, அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தன்னிடம் ரூ.2 கோடி வரையில் பணம் பறித்துள்ளதாகவும், தொடர்ந்து மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் வேறுவழியின்றி புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நர்சிங்கி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரின் அடிப்படையில் நடிகை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஹர்ஷா சாய் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், “இந்த புகார் அனைத்தும் பணத்திற்காக பொய்யாக ஜோடிக்கப்பட்டது எனவும் தனது வழக்கறிஞர் தனிக்கொண்டா சிரஞ்சீவி இனிமேல் இதை பார்த்துக் கொள்வார்” என்றும் ஹர்ஷா சாய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

x