சென்னை என்றாலே அம்மா நியாபகம்தான்: நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி!


சென்னை: சென்னை என்றாலே அம்மாவுடனான நினைவுதான் நியாபகத்திற்கு வருகிறது என நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் பல படங்கள் நடித்து வரக்கூடிய இவர் தென்னிந்திய சினிமாவில் ‘தேவரா’ படம் மூலம் அறிமுகமாகிறார். ஜூனியர் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. வெள்ளை நிறப் புடவையில் நிகழ்வுக்கு வந்திருந்த ஜான்வி கபூர் முழுக்க தமிழில் பேசி அசத்தினார்.

அவர் பேசியதாவது, “சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல நியாபகங்கள் இங்கு உண்டு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். ‘தேவரா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். உங்களுக்கும் பிடிக்கும். சீக்கிரமே நேரடி தமிழ் படத்திலும் அறிமுகம் ஆவேன் என நம்புகிறேன்” என்றார்

x