நடிகர் சித்தார்த்- அதிதி ராவ் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது: குவியும் வாழ்த்துக்கள்!


நடிகர்கள் சித்தார்த் - அதிதி ராவ் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தெலங்கானாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. திரைநட்சத்திரங்கள் பெரிதாக யாரையும் இந்த ஜோடி நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவில்லை. ரசிகர்களுக்கும் தகவல் சொல்லவில்லை. இதனால், இவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அப்போது தகவல் கிளம்பியது. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சமூகவலைதளத்தில் இருவரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து விருது விழா ஒன்றில் பேசிய சித்தார்த், ”திருமணம் எப்போது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நாங்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்யவில்லை. பிரைவேட்டாக செய்தோம்” என்று கூறியிருந்தார்.

இப்போது அதிதி- சித்தார்த் திருமணம் முடிந்திருக்கிறது. நிச்சயதார்த்தத்தைப் போலவே நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கோயிலில் எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள இருவரும் கேப்ஷனாக, “முடிவில்லாத அன்பும் காதலும் தொடங்கி இருக்கிறது. நீதான் என் எல்லாமே. மிஸ்டர் & மிஸஸ்!” என்று பதிவிட்டுள்ளார்கள்.

x