ஸ்டார் விஜய்யில் கண்மணி அன்புடன்: புதிய மெகா தொடர்


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில், 'கண்மணி அன்புடன்' என்ற புதிய மெகா தொடர்வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமைவரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடர், காதல் கதையைக் கொண்டது.

வெவ்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்களான கண்மணி, வெண்ணிலாவைச் சுற்றி இத்தொடரின் கதைக்களம் நகர்கிறது.
கண்மணி உணவு சமைப்பதில் சிறந்தவள்.

வெண்ணிலா நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அன்புவை சந்திக்கும் கண்மணி, ஒருதலையாகக் காதலிக்கிறாள். ஆனால் அன்பு வெண்ணி லாவைக் காதலிக்கிறார்.

இதையடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இதில் அன்புவாக நவீன் வெற்றி, கண்மணியாக மதுமிதா, வெண்ணிலாவாக கிரேசி மற்றும் சாந்தி வில்லியம்ஸ், சஞ்சய் அஸ்ராணி, காதல் கண்ணன், கிரீஷ் அய்யப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

x