மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா... ட்வீட் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!


த்ரிஷா - மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் - த்ரிஷா பிரச்சினை கடந்த சில நாட்களாக சூடுபிடித்து விவாதம் ஆன நிலையில் நடிகை த்ரிஷா மன்சூரை மன்னித்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து த்ரிஷா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாது, “மன்சூர் அலிகானுடன் சேர்ந்து இனி நடிக்க மாட்டேன்” எனவும் கூறினார். இதனை அடுத்து, இதில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து மன்சூர் மீது சென்னை, ஆயிரம் விளக்கு காவல்துறை இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கச் சொன்னது.

இந்த விஷயத்தில் தான் தவறே செய்யவில்லை என ஆரம்பத்தில் இருந்து சாதித்து வந்த மன்சூர் அலிகான், நேற்று மதியம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு, இன்று அவர் த்ரிஷாவிடம் பொதுவில் மன்னிப்பு கேட்டு அறிக்கை விடுத்தார். இதற்கு த்ரிஷாவும் இப்போது ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என பழமொழியை குறிப்பிட்டு மன்சூரை மன்னித்துவிட்டதாக மறைமுகமாக கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x