‘வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ - திவ்யா ஸ்பந்தனா


தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உட்பட பல படங்களில் நாயகியாக நடித்திருப்பவர், கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2013-ல் எம்பியாக பதவி வகித்தார்.அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் பரவின.

அதை மறுத்துள்ள அவர், “ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டன. எத்தனை முறை என்பதை நானே மறந்து விட்டேன். நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், நானே உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கிறேன். அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

x