நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரி மனு: அக்.10-ல் விசாரணை!


நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தார். இவர் விவாகரத்து கோரியுள்ள மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாகவும் இது நெஞ்சம் கசந்த முடிவு எனவும் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். திருமணம் ஆகி இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இவர்களது இந்த முடிவு ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. இருவரும் தங்கள் காதல், திருமண வாழ்வு பற்றி பேசிய பழைய வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்தனர். கடந்த சில வாரங்களாகவே இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போகிறது என்ற விஷயம் பரவி வந்ததையடுத்து அதனை ஜெயம் ரவி நேற்று உறுதி செய்தார்.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். 2009ல் பதிவான தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் அதாவது, அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

x