விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் கதை திருட்டு வழக்கு: இயக்குநர் அட்லி, அர்ச்சனா கல்பாத்திக்கு நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு!


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தின் கதைத்திருட்டு வழக்குத் தொடர்பான மனுவுக்கு பதில் அளிக்குமாறு இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ’பிகில்’. கடந்த 2019ல் தீபாவளிக்கு ரிலீஸான இந்தப் படத்தின் கதை தன்னுடையது என அம்ஜத் மீரான் என்பவர் படம் வெளியான அதே ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக, கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரி, மீரான் 2023ல் மூன்று மனுக்களைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு செலவாக ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லிக்கு பிறப்பித்தது. ஆனால், இந்த தொகை செலுத்தப்படாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து மீரான் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

x