ரூ. 5 கோடி மானநஷ்டஈடு கோரி வடிவேலு வழக்கு: சிங்கமுத்து 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு


சென்னை: தன்னை அவதூறாகப் பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்துள்ள வழக்கில், நடிகர் சிங்கமுத்து இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளி்த்த பேட்டியில் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாகப் பேசியுள்ளதாக நடிகர் வடிவேலு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந் திருந்தார்.

அதில், பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ.5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேச சிங்க முத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தர விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், இந்த வழக்கில் வக்காலத்து தாக்கல் செய்யவும், பதிலளி்க்கவும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இருவாரங்களி்ல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

x